Sunday 5th of May 2024 12:05:41 AM GMT

LANGUAGE - TAMIL
-
சீக்கியர்களில் பொற்கோவில் கருவறைக்குள்  அத்துமீறிய இளைஞன் அடித்துக் கொலை!

சீக்கியர்களில் பொற்கோவில் கருவறைக்குள் அத்துமீறிய இளைஞன் அடித்துக் கொலை!


இந்தியா – பஞ்சாப் மாநிலம் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் அங்கிருந்த பக்தர்களால் நேற்று அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

பொற்கோயிலுக்குள் உள்ள புனித நூல் மற்றும் வைரம் பதித்த வாள் ஆகியவற்றை அவதிக்கும் நோக்கத்தில் அவர் நுழைந்ததாக குற்றஞ்சாட்டி அங்கிருந்த பக்தர்கள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அந்த இளைஞரை அடித்து கொலை செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவில் சீக்கியர்களின் புனித தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள். சீக்கிய குருக்கள் பூஜை செய்வதற்கு தனி இடம் உள்ளது. அதேபோல் அவர்களின் புனித நூல் (குரு கிராந்த் சகிப்) மற்றும் வைரம் பதித்த வாள் ஆகியவையும் கருவறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கருவறைக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த நிலையில் நேற்று உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், திடீரென கருவறைக்குள் நுழைந்து புனித நூல் மற்றும் வாள் இரண்டையும் எடுக்க முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் அங்கு காவலுக்கு நின்ற கோவில் பாதுகாப்பு பணியாளர்கள் அவரை பிடித்து வெளியே கொண்டு வந்தனர். அப்போது கோபம் அடைந்த பக்தர்கள் அந்த நபரை அடித்து உதைத்தனர். இதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, பொற்கோவிலை அவமதிக்கும் வகையிலான இந்த செயலுக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் பொற்கோவில் அமைந்துள்ள பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE